Tuesday, October 18, 2011

2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்து இக்கவிதைகள்


இந்தியனாய் இரு !! ??

இந்தியனாய் இரு

தமிழனாய் இருந்தால்

தீவிரவாதம்

இந்தியனாய் இரு


காஷ்மீரின்

பிடி நிலமும்

இந்தியாவை விட்டுப்

போகாதிருக்க

நிதி கொடு



நம்

கச்சத் தீவை

சிங்கள்வனுக்குத்

தரும்மாய்த் தர

சம்மதமாய் இரு
 

இரு

இந்தியனாய் இரு



ஆங்கிலேயன்

அடிமை செய்தான்

ஆங்கிலம் கற்றாய்



இந்தியனாய்

இருப்பதால்

இந்தி கற்பாய்



வரி கொடு

இந்தியும்

சமஸ்கிருதமும்

அரசு வளர்க்க

நிதி கொடு



இரு

இந்தியனாய் இரு


சிங்களவன்

நித்தம்

நம் மீனவரைச்

சுட்டுப் போடட்டும்

அங்கிருக்கும்

இந்தியக் கப்பற்படை

அதைப் பார்த்து நிற்க

கொடு

வரி கொடு


இரு

இந்தியனாய் இரு



காவிரியில்

பங்கீட?

கேரளத்துத்

தண்ணீரா?

எதற்கு உனக்கு

அது?

கொடு

மின்சாரம் கொடு

கர்நாடகாவுக்குக் கொடு



வட எல்லையில்

சாக

உன் பிள்ளையைக்

கொடு



இரு

இந்தியனாய் இரு



யாரும்

இங்கு

குடியேற

நிலம் கொடு

வணிகம் செய்ய

துணை இரு



பிழைப்பு தேட

வேறிடம்

உனக்கெதற்கு?

உதைத்து

விரட்டுவார்

வேறு மாநிலத்தில்

இரு தமிழகத்தில்

இரு

இந்தியனாய் இரு !!!???
(2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்து இக்கவிதை)




அந்த ஒரு நாள்

மாண்டு போவேன்

நானும்

இன்றோ

நாளையோ

என்றோ

ஒரு நாள்



அன்று

கட்டி அணைத்து அழ

கண்ணீர் சிந்திப்போக

ஊரும் உறவும்

ஓடிவரு,



விடுங்கள் அவர்களை

என்னோடு

எல்லோரும் இருக்கும்

கடைசி நேரம் அது.



அன்பாய் என்னோடு

இருந்தவர்கள் எல்லோரும்

கடைசியாய் என்னோடு

இருக்கட்டும்



எல்லோரும் இருந்து

எல்லோரும் கூடி

கடைசியாய்

ஒன்று செய்வீர்



மாண்ட பின்பாவது

என்னை

அவளிடம் இருந்து

மீட்டுவிடுங்கள்



முதல் உரிமை சொல்லி

அவள்

என் பக்கம் வராமல்

பார்த்துக் கொள்ளுங்கள்

சாவாவது

ஒரு நாள்

என்னை

அமைதியாய் வைக்கட்டும்



அவள் விரல் நுனிகூட

என் உடல் மீது

படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்



அழுகுரல்

கேட்கும் தூரம் தாண்டி

முடிந்தால் ஊர்தாண்டி

அவளை வையுங்கள்



அவளைத் தொட்ட

காற்று கூட

என்னைத் தொடாமல்

அந்த ஒரு நாளாவது

பார்த்துக் கொள்ளுங்கள்



நான்

கடைசியாய் உறங்கும்

அந்த ஒரு நாளில்

நீங்கள் எல்லோரும்

என்னுடன் இருங்கள்.

 ( 2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்து இக்கவிதை)



கற்பணை மனைவி

சிந்திக்கும் போதே

உனைச்

சந்திப்பதுபோல்

ஒரு சுகம்



சிந்தனை

ஒன்றாகி

சந்தேகமில்லா

மனச்

சங்கமம்

அல்லவா

சுகம்



கற்பனைதான்

நீ என்றாலும்

உன் மேல்

காதல் கொள்வது

சுகம்



நான் பேசுவதை

நீ கேட்பதும்

அதை நல்ல

கவிதையென்று

நீ சொல்வதும்

சுமம்



முட்கள் வைத்து

சொற்கள் சொல்லாது

மனதை மறைக்கும்

மொழியறியாது

நீ

கதைப்பதெல்லாம்

சுகம்



எழுதிநான் முடிப்பதற்குள்

இரவுகள் பாதி

முடியும் என்று

உறங்க நீ

போகும் முன்

வலி முடியாமல்

தவிக்குமென் முதுகில்



இதமாக மருந்தினைத்

தேய்த்து

நோகாமல்

நான் எழுத

உன் தமிழ்ப் பணி

சுகம்



இலக்கியம் படித்து

அதை

உன்னிடம்

கதைப்பது சுமம்



தொல்லக்காட்சி

தொலைக்காட்சி

எல்லைத்தண்டி

உன்னை ஆட்கொள்ளாமல்

என்னுடன் நீ

கலப்பது

சுமம்



சக்கரை வியாதியின்

சிக்கல் தவிர்க்க

நாளும் நான் நடக்க

கால்கள் கடுக்க

வாரம் ஒரு நாள்

வஞ்சையாய்

என் பாதம் முதல்

தொடை வரை

நீ பிடிப்பது சுகம்



பிடித்துவிட்ட

கைகளையும்

சமைக்க

நிற்கும்

உன் கால்களையும்

நான் பிடிப்பது

சுகம் சுகம்



உணவே மருந்தாய்

மருந்தே உணவாய்

நீ சமைப்பது

சுகம்



அறம் செய்யும்

வள்ளுவர் சொன்ன

இல்லறம் நாம்

காண்பது சுகம் ......

கனவுகள்

வெறும் கவிதையாகி

கவிதைகளில் மட்டும்

வாழ்வதா சுகம்.

(2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்துஇக்கவிதை)


அந்தக் காதல் கவிதைகள்

அன்று

பூத்த உணர்வுகள்

கோர்த்த மாலை

சருகாகி

மண்ணோடு

மண்ணாகி

இன்னொரு

கொடி துளிர்த்தது

வளர்ந்தது


இது

என்னுயிக் கொடி

என்னோடு

படர்ந்து

பிணைந்து

பூத்து

காய்த்து....

நாங்கள்

ஒரு

பூந்தோப்பு


அன்று பூத்துச்

சருகாகிப் போன போது

பதிவாக்கிப்போன

கவிதைகள்

இன்று

கிழித்தெறியப்

போகும் போது


மனம்

கிழிந்து விட்டது போல்

வலித்து விட்டது


இது

என் கவிதைகள்


இதுவும் என்ன

இராசீவ் காந்தி

கொலை வழக்கா?


அப்பாவி

என் கவிதைகளுக்கு

மரண தண்டனை

கூடாது

எனக்கு

நவனிதம் போல்

நீதிக்காக்கத்

தெரியாது என்பதால்

இக்கவிதைகளை

வாழ விட்டேன்.


(2002யில் வெளியான எனது “ஊமையாகும் உணர்வுகள்” கவிதை நூலில் இருந்துஇக்கவிதை)

Sunday, February 6, 2011

காரை மைந்தன் கவிதைகள்


மறந்தே போனது

எது என் முகம்
எது என் முகவரி
இரவல் வாழ்க்கையும்
முகமூடிகளாய்
               
                 மறந்தே போனது
                 என் முகமும்
                 என் முகவரியும்
                 எனக்கு

இந்தியானாய் ஒரு முகமூடி
திராவிடனாய் ஒரு முகமூடி
தமிழன் என் முகம்
மூடி மூடி

                 மறந்தே போனது
                 என் முகமும்
                 என் முகவரியும்
                 எனக்கு

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால்
சன் டிவியும்
சன் மியூசிக்குமாய்
ஏய் வியூவர்ஸ் குட் மார்னிங்
என்று அழைக்கும்
நிரஞ்சனாக்களும்
பிரஜன்களுமாய்

                 மறந்தே போனது
                 என் பண்பும்
                 என் பேச்சும்
                 எனக்கு

47 A அல்லது 47 B
பேருந்துக்கள் தேடியேறி
“டிக்கட் டிக்கட்” என்னும்
நடத்துனர்
சேன்ஜ்ஆ எடுத்து வச்சிக்குங்க
என்ற ஆணையில்

                  தொலைந்தே போனது
                  என் மொழியும் 
                  என் இனமும் 
                  எனக்கு

பிறந்த நாட்களில்
மெழுகுவர்த்தி அணைத்து
திருமணத்தில்
சமஸ்கிருதம் ஓதி
இராமாயணம் மகாபாரதம் படித்து

                   மறந்தே போனது
                   என் வேரும்
                   என் வரலாறும்
                   எனக்கு
                  
ஈழவிடுதலைக்கு என் வேட்கை
தீவிரவாதமாகவும்
காஸ்மீருக்கு இந்தியப் போரை ஆதரிப்பது
என் கடமையாகவும்

                    திரிந்தே போனது
                    என் தேசமும்
                    என் தேசியமும்
                    எனக்கு.
     


நம்புங்கள்.

ஈழம் பிறக்கும்
நாள்முன்
நான் இறக்கும்
நாள் வந்தால்

ஈழம் பிறக்கும் நாள்
“ஈழம் பிறந்தது”
என்று
என் கல்லறையில்
எழுதுங்கள்.

இந்த எழுத்துக்கள்
படர்ந்த பின்தான்
மண்ணுள்
என் உடல்
செரிக்கும்
நம்புங்கள்.

சிரிப்பு

லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு
ஐந்து கோடி சொத்துதான் என்னிடம் இருப்பு
நல்லாச் சொன்னீங்க
இவ்வாண்டிற்கு இதுதானுங்க பெரும் சிரிப்பு
திரைக்கதை எழுதித்தான் நீங்க பிழச்சீங்க
அரசியலிலும் இப்படி வசனம் பேசியே நடிச்சீங்க
தெரியாமலயா அழைச்சோங்க
உங்கள நாங்க கலைஞருன்னு


---எல்லை----

ஒரு கண்ணத்தில் அறைந்தவனிடம்
மறு கண்ணத்தைக் காட்டு
என்ற இயேசு தான்
தன் தந்தையின் இல்லத்தில்
கடைகள் வைத்த வரை
சாட்டையால் அடித்து விரட்டினார்

பொறுத்தலுக்கும் சகித்தலுக்கும்
எவருக்கும்
ஒரு எல்லை உண்டு
என்பதனால் தானே.


வீழ்வது நாமல்ல

அலைகளிடமிருந்தும்
கற்போம்
களைந்த பின்பும்
வளரும்
களைகளிடமிருந்தும்
கற்போம்

மாண்டாலும்
பூமியைப் பிளந்து
பலவாய் வளரும்
வாழைகளைப் போல்

நாம்
ஒருவர் விழ
ஓராயிரமாய் எழவோம்.


எழுதுகோல்

எழுதுகோல்
மனங்களை உழுது
மனித சமத்துவம்
காணும்
ஏர்முனை.

மலைகள்

என்
மண்ணைக் காக்க
மலைத் தொடர்கள்
சுவராய் நின்றும்
இந்த
மலைவழிதான்
களவு போனது
என்
மண்ணும் மரபும்.


உன் நிம்மதிக்குள்

நிம்மத்யாய்த் தூங்கு
உன் நிம்மதிக்குள்
நானில்லை

வராத உறக்கத்தை
விடியாத இரவுகளுள்
தேடித் தேடி
புரளும் என்னுள்
இன்னும் நீ

நிம்மத்யாய்த் தூங்கு
உன் நிம்மதிக்குள்
நானில்லை.


எதைச் சொல்ல

எதைச்சொல்ல உன் மனதுள் நான் விதையாய் விழ
எதைச்சொல்ல என் உயிர் அதில் எருவாய் இட
எதைச்சொல்ல என் மனம் அங்கு மழையாய் வர
எதைச்சொல்ல என் மூச்சை அங்குக் காற்றாய் விட
விடை சொல்லு காதல் விதை முளை விட.



புது வருடம் 2011
ஒரு வருடம் துக்கம் கழித்து
புது வருடம் கொண்டாட
இழந்ததென்ன ஒரு உயிரோ?
ஒரு லட்சம் தமிழர் இறந்த ஓலம்,
தமிழீழ நாடு இழந்த சோகம்
மறைந்து போகுமோ???
மண்ணை மீட்டு புலிக்கொடி பறக்கும்
தமிழனுக்கு அன்று புத்தாண்டு பிறக்கும்

கடந்தது 2010

கடந்தது நம்மை 2010
கடந்தோமா நாம் 2010 ?

அம்மா

தோற்றுப்போனேன் காற்றுடன்.
தன்னோடு கரைத்துக்கொண்டது
காற்று
உன் உயிரை !

மண்ணில் மண்டியிட்டு
மன்றாடினேன்.
பிடுங்கி என்னை
புதைத்தார்கள் உன்னை !
மண்ணும் வென்றது.

என்னோடு கலந்து
நரம்போடு பிணைந்து
உணர்வோடு உருகி
நினைவோடு நிறைந்து
விழித்தாலும் உறங்கினாலும்
என் கண்ணுள் பதிந்துப் போனவளே
என் அம்மா !
காற்றென்ன
மண் என்ன
மழை என்ன
மலை என்ன
யார் வெல்வார்
யார் பிரிப்பார்
என்னுள் உறைந்த
உன்னை.